சீனாவில் யிகாய் ஆராய்ச்சி நிறுவனம் (YICAI Research Institute) நடத்திய கணிப்பீட்டில் உலகில் தொற்று நோயை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
யிகாய் ஆராய்ச்சி நிறுவனம் ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடகக் குழுமாகும்.
இந்த நிறுவனத்தின் கணிப்பீட்டின்படி சீனா, இலங்கையைத் தொடர்ந்து ஆப்பிரி்க்க நாடான கானா மூன்றாம் இடத்தையும், கொரியா நான்காம் இடத்தையும் மியன்மார் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.
அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளும் முறையே அடுத்த 10 இடங்களில் உள்ளன.